search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை தாக்குதல்"

    மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப் கூறிய கருத்து தவறானவை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதுதொடர்பான விசாரைண நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். நவாஸ் ஷெரீப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி, அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஷெரிப்பின் கருத்தை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தலைமையில் இன்று அவசரமாக கூடியது. 



    இந்த கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி குர்ராம் தஸ்தகிர், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில், வெளியுறவுத் துறை செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நசீர் கான் ஜான்வா உள்பட பலர் கலந்துக் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, தேசிய பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஆதாரங்களும், உண்மைகளும் மறுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஏற்கக்கூடியது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரிப் அளித்திருக்கும் கருத்துகள் தவறானவை. 

    இதுபோன்ற, தவறான கருத்துகளுக்கு இந்த குழு சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தாமதம் செய்து வருவது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. 

    இந்த விசாரணையின்போது மும்பை தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை சந்திக்க விடாதது, உள்ளிட்ட முக்கிய பல கோரிக்கைகளை இந்தியா மறுத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கசாப்பை அவசரமாக தூக்கிலிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குல்புஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா பொறுமை காத்து ஒத்துழைக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×